states

img

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து – 5 பேர் பலி  

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.  

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கம் லிமிடெட் என்ற பெயரிலான அந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சுரங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டும்போது திடீரென சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகி உள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதனைதொடர்ந்து அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதில் பலர் உள்ளே சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

;